வணக்கம்,
இன்று பொங்கல் திருநாளா இல்லைத் தமிழ்ப் புத்தாண்டா என்றக் குழப்பம் நீடிக்கும் நிலையில், எதுவாக இருந்தாலும் இன்று 'தமிழர்த் திருநாள்' என்று எடுத்து கொண்டு இந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்...
காலை 5 ம்ணிக்கு எழுந்து சூரியக் கடவுளை வணங்கி,பெரியவர்களிடம் ஆசி பெற்று இந்த வருடம் நல்ல வளம்மிக்க வருடமாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு இந்த நாளை எப்படி செலவிடப் போகிறோம் என்று என் எண்ண அலைகளை மிதக்க விட்டேன்.....
5 நாட்கள் விடுமுறை என்பதால் கல்லூரியிலும் பெரிதாக செய்து முடிப்பதற்கு வேலைகள் இல்லை...
சரி அப்போ இன்னைக்கு செம சந்தோஷமாக நாளை கழிக்கலாம் என்று உள்ளம் மகிழ்ந்து கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை பார்த்தேன்....அது என்னை பார்த்து 'என்னை விட்டால் உனக்கு வேறு என்ன பொழுது போக்கு' என்று ஏளனமாக சிரித்தது...
உண்மைதான்,
தொலைக்காட்சி மட்டுமே பொழுது போக்கு என்று ஆகிவிட்ட நிலையில் ,எனக்கு மட்டும் விதி விலக்கா என்ன?
எந்திரன் நம்மை பிற்காலத்தில் ஆழ்வான, இல்லையா என்பது வேறு விஷயம்,ஆனால் இன்று ரஜினியின் எந்திரன் கண்டிப்பாக அனைவரது இல்லதிலும் குடி இருப்பார்.கதை தரம் சற்று குறைவாக இருந்தாலும் கதையின் கரு அருமையானது...அதற்காகவே அந்த திரைப் படத்தை பார்க்கலாம்...
சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் கண்டிப்பாக குடும்ப அமைப்பின் சிக்கல்கள் பற்றி தான் இருக்கும்......அவரும் சரியான தீர்ப்பைத் தான் வழங்குவார்..
லியோனி பாடல்களை வைத்தே தன் பட்டிமன்றத்தை நடத்தி விடுவார்....
பின்னர் masala programs என்று அழைக்கப்படும் துக்கடா நிகழ்ச்சிகள் வரும்....அதை நேரம் கடத்தும் சாதனமாக எண்ணி கொண்டு இரவு வரை கழித்து விட்டு நாளை முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி செல்வேன்.......
இது வெறுப்பை தந்தாலும் வேறு வழியில்லை.....
ஊரோடு ஒத்து வாழக் கத்து கொண்டு தான் ஆக வேண்டும்.....
'Be a roman while in Rome'
No comments:
Post a Comment